கண்ணீர்னா ரொம்ப பிடிக்குமாம்..!!

வணக்கம் நண்பர்களே..!
மடகாஸ்கர் பகுதியில் தூங்கும் பறவையின் கண்களிலிருந்து, கண்ணீரை குடிக்கும் ஒருவகை அந்துப் பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்களாம். பொதுவாக மான் போன்ற பாலூட்டிகளின் கண்களிலிருந்து அந்துப் பூச்சிகள் கண்ணீரை குடிக்குமாம். விலங்குகள் பூச்சிகளை விரட்டுவதில்லை.
ஆனால், முதல் முறையாக பறவையின் கண்களிலிருந்து, அந்துப் பூச்சி கண்ணீர் குடிப்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடிதுள்ளனராம்.
 அந்துப் பூச்சி கண்களை மூடிக்கொண்டு தூங்கும்,  பறவைகளின் கண்களிலிருந்து தும்பிக்கை போன்ற உறிஞ்சும் அவயத்தை பயன்படுத்தி, கண்ணீரை குடிக்கிறது.
இது தூங்கும் பறவையை தொல்லை செய்வதில்லையாம்.  அந்துப் பூச்சிக்கு தேவையான உப்பு கண்ணீரிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனராம்.
இத்தகவல் தினமலர் சிறுமலரில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற  வித்தியாசமான தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.
இதுபோன்ற வித்தியாசமான, புதுமையான மற்றும் வியக்கவைக்கும் தகவல்களைப்பற்றி மேலும் அறிந்திட நண்பர் பனித்துளிசங்கர் வலைப்பக்கத்தில் காணலாம்.
* * * * * ** * * **
You can leave a response, or trackback from your own site.

7 Responses for this post

  1. புதுமையான தகவல் நண்பரே ..

    பகிர்வுக்கு நன்றி

  2. வாங்க நண்பரே..! தங்களின் வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி..!

  3. பகிர்வுக்கு நன்றி ..!
    அந்த பூச்சி ரொம்ப நல்லவனோ ..???

  4. ஆமாம் நண்பரே..! அது ரொம்ப நல்லப்பூச்சிதான்..! நம்ம கண்ணீரை வந்து குடிக்காத வரை...
    தங்களின் வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி..!

  5. புதுமையான தகவல் பகிர்வுக்கு நன்றி.

  6. வாங்க நண்பரே..! தங்களின் வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி..!

  7. "இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


    இடுகைக்கு

    // பிரவின்குமார் said...

    விழிப்புணர்வுமிக்க சிந்திக்கவைக்கும் தகவல்கள் நண்பரே..! நிச்சயம் இச்செய்தியை எனக்கு தெரிந்த நண்பர்களிடமும், கிராமத்து மக்களிடமும் எடுத்துக்கூறுகிறேன். நீங்கள் கூறியதுபோல் தனிப்பட்ட மனிதன் எடுத்துக்கூறுவதை விட போலியோ சொட்டு மருந்து குறித்து அரசாங்கம் விளம்பரம் செய்யும்போதே இது போன்ற மிக முக்கியமான தகவலையும் கட்டாயம் சேர்த்து எடுத்துக்கூறினால் சிறப்பாகத்தான் இருக்கும்..!
    ஏதோ கடமைக்கு சேவை செய்கிறோம் என்று செவிலியர்களும் பொது சேவைகளில் ஈடுபடுவர்களும் இதுபோன்ற முக்கிய தகவல்களை தெரிவிப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
    பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!//

    பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

Post a Comment