10:45 AM
Praveenkumar
பெண்ணே..!
என் கண்களில் உன்நினைவுகளின் உருவம்
உலக உருண்டைபோல் சுழல்வதால்,
உயிர் கண்மணிகள் இரண்டும்
சொர்க்கமொன்றும் நரகமொன்றுமாய்,
மாறி மாறி உன் நினைவுகளால் கொல்கிறது..!
நீ விரும்புவதுபோல் நடித்தபோது
சொர்க்கத்தில்...! - அது பொய்த்தோற்றமிட்ட
கானல்நீரென உணர்ந்த போது நரகத்தில்...!
இருப்பினும் ஏனோ தெரியவில்லை..??!!
என்றென்றும் நீ என் இதயத்தில்..!
* * * * * * * * *