நேற்றைய நாளை இன்று - இன்றைய நாளை இன்றே..!
7:08 PM
Praveenkumar
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு எழுதும் வாய்ப்பை அமைத்துக் கொண்டேன். இந்தப் பதிவு ஏதாவது கருத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்று சிந்தித்ததால் தாமதம். (உமக்குதான் சிந்தித்து எழுதுவது வரலியே விட்டுருங்கனு புலம்புவது கேட்குதுங்க... சரி விதி யாரை விட்டது விசயத்துக்கு வருவோம்) தொழில்நுட்ப தாக்கம் நிறைந்த இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் நிறைய பயனுள்ளதகவல்கள் ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் கிடைப்பதால் அவற்றை தட்டச்சு செய்து வலைப்பக்கத்தில் பதிவிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கவில்லை. (அதற்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதால்.. ஒரு சலிப்புத் தன்மை அம்புட்டுத்தேன்..) அதனால்தான் இவ்வளவு...... நீண்ட......... இடைவெளி. சரி நண்பர்களே... கருத்துக்கு வருவோமா..!!. (ங்கொய்யாலா இன்னும் வரலியா... )






