விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..!
9:38 AM
Praveenkumar
வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் எமது முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் அளவற்ற மகிழச்சியடைகிறேன். குடியரசு பெற்று 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம்நாட்டில் இன்றும் வறுமையும், பட்டினிச்சாவும் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளது. அரசின் கண்துடைப்பு சலுகைகள் தேர்தலை ஒட்டி மக்களுக்கு அப்பப்ப கிடைத்து வந்தாலும். உணவு மற்றும் தானிய உற்பத்தியில் இன்னும் மந்தமான நிலையே தலைதூக்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையும், தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்படும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
இன்றைய பதிவில் நான் பகிர்ந்திட இருப்பது. நம்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் அழிவினைப்பற்றி பேச்சுப்போட்டியில் பங்கேற்று உரையாற்றிய திருப்பூர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பூ.க.அஷ்வத் ஆதித்யா ஃபேஸ்புக் மூலம் நண்பரானர். (நட்புக்கு வயதுபேதம் தேவையில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்) அவர் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலின் மொழிபெயர்ப்பு தான் இப்பதிவு. இனி அவர் உங்களுடன் பேசுவார்.
இன்றைய பதிவில் நான் பகிர்ந்திட இருப்பது. நம்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் அழிவினைப்பற்றி பேச்சுப்போட்டியில் பங்கேற்று உரையாற்றிய திருப்பூர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பூ.க.அஷ்வத் ஆதித்யா ஃபேஸ்புக் மூலம் நண்பரானர். (நட்புக்கு வயதுபேதம் தேவையில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்) அவர் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலின் மொழிபெயர்ப்பு தான் இப்பதிவு. இனி அவர் உங்களுடன் பேசுவார்.
அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு பேச வந்த தலைப்பு விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..! உழுவார் உலகத்திற்கு ஆணி” என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப , உழவு சிறப்பானது ஆகும். மனிதனாக பிறந்தால் உழைத்து வாழ வேண்டும். அதுவே நிலையான உயர்வைத் தரும். நம் பாரதத்தில் விவசாயமானது முதுகெலும்பாய் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவுத் தொழிலின் உண்மையான நிலை என்ன..!!?? விவசாயத்தினை வெறும் சாயமாகவே இந்த சமூகம் மதிக்கிறது...!
அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருந்தும் என்ன பயன் ?? விவசாயி இன்றும் வறுமையில் வாடுகிறான். தம்மோடு போகட்டும் இந்த ஏர் பிடித்து உழவு செய்தல். இனி வரும் சமுதாயத்திற்கு வேண்டாம் என்று எண்ணுகிறான். இந்நிலைத் தொடர்ந்தால் எதிர்காலம் கேள்விக்குரியகும்..!? சமுகம் சங்கடத்துக்குள்ளாகும்.
(நன்றி.- கூகுள் தேடுபொறி படம்)
நம் நாட்டில் உணவு பஞ்சமும் பற்றாக்குறையும் ஏற்படுமாயின், சுவீடன் எத்தியோபியா, சோமாலியா, போன்ற நாடுகளில் ஒன்றாகிவிடும். விவசாய வீழ்ச்சிக்கு முதற் காரணம் சோம்பல் வயலில் உழைக்க விருப்பப்படுவது இல்லை. சங்க காலத்தில் விவசாயத்தை களியாக செய்தார்கள். ஆனால் இன்றோ களி கேலியாகி விட்டது. கொள்ளை இலாபத்திற்காக இரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்தி மண்ணை மாசுபடுத்துகிறான்.
சோம்பல் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் இடைத்தரகர்கள். கடின உழைப்பாலான விளச்சல் சற்றும் உழைப்பில்லாத இடைத்தரகர்கள் கையில் அகபட்டு கொள்கிறது. தொழிற்சாலை பெருக்கம், நகர மயமாதல், இயற்கைச் சீற்றம், விண்ணைமுட்டும் விலையேற்றம், சமுதாய சிக்கல்கள், நீர் மற்றும் மின்சார பற்றாக்குறை, நவ நாகரீகம், நிலையற்ற வருமானம், சுற்றுச்சூழல் போன்ற பல காரணங்களை விவசாய வீழ்ச்சிக்கு சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், இது நமக்கு ஆறுதல் அல்ல அவமானம்.
இத்தகைய காரணங்கள் வெறும் கண்துடைப்புகள். ஒவ்வொருவரும் தாமே முன்வந்து விவசாயம் செய்ய வேண்டும். அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. சட்டங்கள் கடுமையானல்தான் தவறுகள் குறையும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருடத்திற்கு மூன்று மாதம் கட்டாயம் விவசாயம் செய்ய வேண்டும். இல்லையேல் சிறைவாசம் போன்ற சட்டங்கள் கொண்டுவர வேண்டும். இயந்திரத் தொழிலகம் போன்று விவசாயப் பண்ணைகள் தொடங்க வேண்டும். இத்தகைய ஆக்கப்புர்வமான நடவடிக்கைகளில் நம் அரசு ஈடுபடுமாயின் நம்நாடு விவசாய வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளர்ச்சி பெறும்.
இத்தகைய காரணங்கள் வெறும் கண்துடைப்புகள். ஒவ்வொருவரும் தாமே முன்வந்து விவசாயம் செய்ய வேண்டும். அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. சட்டங்கள் கடுமையானல்தான் தவறுகள் குறையும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருடத்திற்கு மூன்று மாதம் கட்டாயம் விவசாயம் செய்ய வேண்டும். இல்லையேல் சிறைவாசம் போன்ற சட்டங்கள் கொண்டுவர வேண்டும். இயந்திரத் தொழிலகம் போன்று விவசாயப் பண்ணைகள் தொடங்க வேண்டும். இத்தகைய ஆக்கப்புர்வமான நடவடிக்கைகளில் நம் அரசு ஈடுபடுமாயின் நம்நாடு விவசாய வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளர்ச்சி பெறும்.
”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!” என்று கூறி என் பேச்சை கேட்ட அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி..! வணக்கம்..!.
* * * * * * *