அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம்
11:00 AM
Praveenkumar
வணக்கம் நண்பர்களே..! முந்தைய பதிவான அலைபேசியும் - குறுஞ்செய்திகளும் பதிவில் அடுத்த பதிவில் சமூக கருத்துடன் பகிர்வதாக குறிப்பிட்டுயிருந்தேன். அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு.
கடந்த தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் சாதாரணமாக சனி்க்கிழமைகளில் ஞாயிறு விடுமுறைக்காக மக்கள் அவரவர் சொந்த பகுதிக்கு செல்ல (எம்மைப்போல) அலைகடலென திரண்டு இருப்பதை பார்க்கும்போதே ”ச்சபா... இப்பவே கண்ண கட்டுதே..”! என வடிவேலு பாணியில் எண்ணத் தோன்றும். அதுவும் பண்டிகை காலங்களில் என்றால் சொல்லவா வேண்டும்..??!!!! ச்சப்பப்பா...!!!! கொடுமைடா சாமி..!!! என்று தோனும்.
பேருந்துக்குள் இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது நமக்கோ (நடத்துனரையும் சேர்த்து) பயணத்தை நினைத்து பயத்தில் விழி பிதுங்கி இருக்கும். (குளிர்சாதன பேருந்துகள் தவிர) அதை அனுபவிக்கும் போதுதான் அதன் வலி தெரியும். (என்னத்தங்க சொல்றது வாழ்வா சாவா போராட்டம்தான்). நான் சொல்வது ஒரு சில வேளைகளில் மட்டுமே செல்லும் கிராமத்து பேருந்துகளுக்கு முழுவதும் பொருந்தும். (நம்ப ஊர் சாலைகள் போல கிராமத்து பேருந்துகளும் ரொம்ப மோசம்ங்க...!!)மற்றபேருந்துகளுக்கு சில சமயங்களில் பொருந்தும். (அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி) அப்பொழுது கூட்டமில்லாத குளிர்சாதன பேருந்துகைளை பார்க்கும் போது ரொம்ப நொந்துக் கொள்ள வைக்கும். பி்ன்ன என்னங்க.. 80 பேர் இருக்கையில 10 பேர் போனால் எப்படியிருக்கும்..???!!
அப்ப ஏழைக்கு ஒரு நீதி..??? பணக்காரருக்கு ஒரு நீதியா ??? இது மிகவும் அநீதி. நகர பேருந்துகள் எனப்படும் பேருந்து நடனமாடும் பேருந்தாக மாறிவருவது மறுக்க முடியாத உண்மை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத மிகவும் இடர் நிறைந்த பயணம். பெரும்பாலும் யாரும் விரும்பி படியில் நிற்பதில்லை சூழ்நிலை நிற்கவைக்கிறது.
கர(ண)ம் தப்பினால் மரணம்.
இப்ப படிக்கட்டுகளில் ”படியில் பயணம் நொடியில் மரணம்” என்பது மாறி ”படியில் நின்று ”செல்”போன் பேசாதீர்..!! இவற்றைதான் காணமுடிறது. மாற்றம் இருக்கலாம் அதுக்காக இப்படியா..!!!???
அவற்றை முதலில் மாற்ற வேண்டும். ”படியில் நிற்காதீர்கள்”..!! இப்படியிருந்தால் ஓரளவுக்கு மாற்றம் வரும். அதுசரி நாம் எப்பொழுது விதிமுறைகளையும் அறிவுரைகளையும் கடைபிடிக்கிறோம்..!!??? என்ன சொல்லுறீங்க...!!??? அப்படி செய்திருந்தால் அல்லது செய்தால் ஏன் இந்த அவல நிலை..??!! (குறைகள் என்று எழுத ஆரம்பித்தால் பெரிய தொடராகவே எழுதலாம்..!)
மேற்குறிப்பிட்ட இடர் நிறைந்த சூழலிலும் நம்ப மக்கள் பேருந்துக்குள் அலைபேசியை வைத்து செய்யும் அட்டகாசங்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஓட்டுனருக்கு மற்றும் நடத்துனருக்கு கொடுக்கும் தொந்தரவுகள் குறித்தும் காண்போம்.
(நன்றி. கூகுள் படங்கள்)
பக்கத்திலிருக்கும் நண்பனுக்கோ, தெரிந்தவருக்கோ, தவறிய அழைப்பு செய்து அவரை மட்டுமின்றி பொதுமக்களையும் நடத்துனரையும் கடுப்பேத்தி (ம) வெறுப்பேற்றும் வகையில் தொந்தரவு செய்வது.
தன்னுடைய மகிழ்ச்சிக்காக, ஒலிபெருக்கியை வைத்து முன்னால் இருக்கையில் இருப்பவர் அலைபேசியை பயன்படுத்துவதால் ஓட்டுநனருக்கு கவனசிதறலையும், பின்னால் இருக்கையில் இருப்பவர் நடத்துனருக்கு காரியச்சிதறலையும் (பயணச்சீட்டு வாங்குவதில்லை)
அலைபேசியால் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரிய தலைவலியே ஏற்படும் வகையில் அட்டகாசம் செய்து தொந்தரவு ஏற்படுத்துவது. இப்படி அலைபேசியை நடத்துனர் ஊதும் ஊதுகுழல் ஒலி ஓட்டுநனருக்கு கூட கேட்காத நிலையும் இதனால் ஏற்படுத்துவது. இவற்றையெல்லாம் முடிந்த வரை நாம் தவிர்ப்போம். முடிந்தவரை நம்மை சார்ந்தவர்களையும் தவிர்க்க வைப்போம் என்பதே இத்தொடர்பதிவுகளின் முக்கிய கருத்து. தங்கள் கருத்தையும் அவசியம் கூறுங்கள்.
(நன்றி. கூகுள் படங்கள்)
திருவிழாவில் பாடும் ஒலிப்பெருக்கி போன்று எவ்வளவு அதிகபட்ச சத்தமோ... அவற்றை வைத்து வெளியில் அனைவருக்கும் கேட்கும்படி பாட்டு கேட்பது. (சிலருக்கு பிடிக்கும் பலருக்கு பிடிக்காது)
பக்கத்திலிருக்கும் நண்பனுக்கோ, தெரிந்தவருக்கோ, தவறிய அழைப்பு செய்து அவரை மட்டுமின்றி பொதுமக்களையும் நடத்துனரையும் கடுப்பேத்தி (ம) வெறுப்பேற்றும் வகையில் தொந்தரவு செய்வது.
தன்னுடைய மகிழ்ச்சிக்காக, ஒலிபெருக்கியை வைத்து முன்னால் இருக்கையில் இருப்பவர் அலைபேசியை பயன்படுத்துவதால் ஓட்டுநனருக்கு கவனசிதறலையும், பின்னால் இருக்கையில் இருப்பவர் நடத்துனருக்கு காரியச்சிதறலையும் (பயணச்சீட்டு வாங்குவதில்லை)
அலைபேசியால் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரிய தலைவலியே ஏற்படும் வகையில் அட்டகாசம் செய்து தொந்தரவு ஏற்படுத்துவது. இப்படி அலைபேசியை நடத்துனர் ஊதும் ஊதுகுழல் ஒலி ஓட்டுநனருக்கு கூட கேட்காத நிலையும் இதனால் ஏற்படுத்துவது. இவற்றையெல்லாம் முடிந்த வரை நாம் தவிர்ப்போம். முடிந்தவரை நம்மை சார்ந்தவர்களையும் தவிர்க்க வைப்போம் என்பதே இத்தொடர்பதிவுகளின் முக்கிய கருத்து. தங்கள் கருத்தையும் அவசியம் கூறுங்கள்.