படித்ததில் பிடித்தது - நம்பிக்கையும் பேச்சும்..!
10:46 AM
Praveenkumar
வணக்கம் நண்பர்களே..! வழக்கம் போல் மாதத்திற்கு ஏதாவது இரண்டு பதிவு போடவேண்டுமே என்பதற்காக.... அலுவலகத்தின் சுவரினை வெறித்துப் பார்த்து யோசிக்கையில் அங்கே இருந்த வாசகத்தையே பதிவாக போட்டுவிடலாம் என தோன்றியது. (நல்ல பதிவு எழுதனும்னா நிறைய யோசிக்க வேண்டி இருக்கே..! அதனால, அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்) வேறு என்ன செய்வது ஏதாவது உருப்படியா சிந்தனை வரனும்னா சுவரை பார்க்கனும். இல்லைனா சுவரில் முட்டியாவது யோசிக்கனும் என்று மொக்கை பதிவர்கள் சங்கத்துல சொல்லியிருப்பதால சுவரில் அப்புறம் முட்டி யோசிக்கலாம். அதுவரை அங்கு படித்ததை பகிர்வுக்காக பதிவிடலாம் என்பதற்காகவே இப்பதிவு.
* * * * * *
அனைத்தும் இழந்து கடவுள்மேல்
நம்பிக்கை இருந்தால்
நீ இழந்தது எதுவுமில்லை.
அனைத்தும் இருந்து கடவுள்மேல்
நம்பிக்கை இல்லையென்றால்
உன்னிடம் இருப்பது எதுவுமில்லை.
* * * * * *
நண்பர்களைப்பற்றி
நல்லதை பேசு..!
விரோதிகளைப்பற்றி
ஒன்றும் பேசாதே..!
* * * * * *