என்றென்றும் நீ என் இதயத்தில்..!

பெண்ணே..!

என் கண்களில் உன்நினைவுகளின் உருவம்

உலக உருண்டைபோல் சுழல்வதால்,

உயிர் கண்மணிகள் இரண்டும்

சொர்க்கமொன்றும் நரகமொன்றுமாய்,

மாறி மாறி உன் நினைவுகளால் கொல்கிறது..!

நீ விரும்புவதுபோல் நடித்தபோது

சொர்க்கத்தில்...! - அது பொய்த்தோற்றமிட்ட

கானல்நீரென உணர்ந்த போது நரகத்தில்...!

இருப்பினும் ஏனோ தெரியவில்லை..??!!

என்றென்றும் நீ  என் இதயத்தில்..!
                      * * * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

10 Responses for this post

  1. அருமையான கவிதை...

  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா மேடம் மற்றும் நண்பர் வெறும்பய அவர்களே..!

  3. காதல் கலந்து கவிதையாக..

  4. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவரே..!

  5. பிரபல பதிவர் Cable Sankar சார் அவர்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி..!

  6. சொர்க்கம் பாதி
    நரகம் பாதி
    சேர்ந்து
    பிசைந்த
    கலவையா
    காதல்?

    அருமை.

  7. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர் santhanakrishnan அவர்களே..!

  8. பயபுல்ல இந்த மாதிரி வேலையெல்லாம் கூட நீ பன்றியா...யாருடா அந்த பொண்ண? எனக்கு தெரியாம...ஏய்! ஒழுங்கா உண்மைய சொல்லு மவனனே எங்கேயிருந்து காப்பியடிச்ச?சும்மாதான் சொன்னேன்.... காதலான வரிகள்...

Post a Comment