எமது கற்பனை கவிதைகள்-2



மொழி..!
என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!

எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!

இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!

உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!

எதிர்கால உலகத்தில் பேசப்படும்

"முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

 கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....!

 என்னைப்போல் கனவுகளில்

கன்னி அவளை காணாதீர்,

நினைவுகளை பெருக்கிடுவாள்...!

நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!

பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!

பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!

ஆழ்வாராய் இருப்பவனையும்,

போக்கிரியாய் மாற்றிடுவாள்...!
You can leave a response, or trackback from your own site.

21 Responses for this post

  1. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  2. வாழ்க உங்கள் தமிழ்பற்று, அருமை.

  3. அகநாழிகை பொன்.வாசுதேவன் சார்,
    அண்ணாமலையான் சார்,
    சைவகொத்துப்பரோட்டா சார்,
    தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி! நன்றி!

  4. ஆஹா...அருமை...ஆமாம் ....கவிதையின் நாயகி யார்? வாழ்க வளமுடன் வேலன்.

  5. வாங்க.. வேலன் சார். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
    கவிதையின் நாயகி என்று யாருமில்லை சார். நாமகவே கற்பனை செய்து கொள்வதுதான் சார்.
    தங்கள் கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சார்.

  6. அருமையான கற்பனை வாழ்த்துக்கள் !

  7. ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!

  8. சார் வணக்கம்
    நமக்கு கவிதா ஞானம் எல்லாம் கிடையாது
    அதுனால நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
    (பெரிய விஞ்ஞானியா இருப்பிக போல இருக்கே )

  9. வாருங்கள் மங்குனி அமைச்சரே... தங்கள் வருகைக்கு முதலில் நன்றி.
    சார் எல்லாம் வேணாம் பிரவின் என்றே கூறுங்கள். (அப்புறம் விஞ்ஞானியெல்லாம் கிடையாது ஏன் இப்படி உசுப்பேத்தி உடம்மை இரணகலமாக்குறீங்க....) மீண்டும் வருக தங்கள் கருத்துக்கு நன்றி.

  10. போக்கிரியாக மாற்றியதாக தெரிய வில்லை... கவிஞனாக மாற்றியதாகத்தான் தெரிகிறது... பாராட்டுக்கள்.

  11. வாருங்கள் சி.கருணாகரசு சார். தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!
    மீண்டும் வருக!

  12. அருமையான கவிதைகள் - ரசித்து எழுதியவை. வாழ்த்துக்கள்.

  13. மிக அருமை !! வாழ்த்துக்கள்!!

  14. நண்பரே புதிய பதிவு எப்பொழுது .

  15. பிரவீன் கவிதை நன்று... வாழ்த்துகள்.

    //ஆழ்வாராய் இருப்பவனையும்,

    போக்கிரியாய் மாற்றிடுவாள்...!//

    ஆழ்வாரும் வேலை வெட்டி இல்லாதவன்தான், போக்கிரியும் வேல வெட்டி இல்லாதவன்தான். பொருள்குற்றம் களையட்டும்.

    - சென்னைத்தமிழன்

  16. //Chitra said...
    அருமையான கவிதைகள் - ரசித்து எழுதியவை. வாழ்த்துக்கள்.//
    தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி மேடம்!
    மீண்டும் வருக!

    //தேவன் மாயம் said...
    மிக அருமை !! வாழ்த்துக்கள்!!//
    தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி சார்!
    மீண்டும் வருக!

    //♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    நண்பரே புதிய பதிவு எப்பொழுது .//

    மிக்க நன்றி நண்பரே... இனிமேல் தங்கள் ஆதரவால் விரவாக பதிவிடுகிறேன்.

    சென்னைத்தமிழன் சார்
    தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!
    கவிதை நடையை இனி மாற்றிக்கொள்கிறேன்.

    அனைவரும் மீண்டும் வருக!

  17. உங்கள் தமிழ் பற்றை கண்டதும் இயல்பாகவே உங்கள் தளத்திற்குள் நுழைய விரும்பினேன்.
    உங்களைப் போல ஒருவர் தான் நானும்........
    தொடருங்கள்..................
    பின் தொடர்வேன்..........
    புதிய அபிமானி..


    அருமையான கவிதைகள்

  18. தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி மேடம்!
    மீண்டும் வருக!

  19. வாழ்த்துக்கள் நண்பரே

    உங்கள் கவிதைகள் நன்று

    உங்கள் வலை தளத்தில்

    தொடர்வேன் இனி .........

    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.com

  20. very nice great sharing i really like it
    hope that u will keep it up
    thanks to share
    Nokia Mobiles

Post a Comment