அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம்

வணக்கம் நண்பர்களே..!  முந்தைய பதிவான அலைபேசியும் - குறுஞ்செய்திகளும் பதிவில் அடுத்த பதிவில் சமூக கருத்துடன் பகிர்வதாக குறிப்பிட்டுயிருந்தேன். அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு.

கடந்த தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் சாதாரணமாக சனி்க்கிழமைகளில் ஞாயிறு விடுமுறைக்காக மக்கள் அவரவர் சொந்த பகுதிக்கு செல்ல (எம்மைப்போல) அலைகடலென திரண்டு இருப்பதை பார்க்கும்போதே ”ச்சபா... இப்பவே கண்ண கட்டுதே..”! என வடிவேலு பாணியில் எண்ணத் தோன்றும். அதுவும் பண்டிகை காலங்களில் என்றால் சொல்லவா வேண்டும்..??!!!! ச்சப்பப்பா...!!!! கொடுமைடா சாமி..!!! என்று தோனும்.

பேருந்துக்குள் இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது நமக்கோ (நடத்துனரையும் சேர்த்து) பயணத்தை நினைத்து பயத்தில் விழி பிதுங்கி இருக்கும். (குளிர்சாதன பேருந்துகள் தவிர) அதை அனுபவிக்கும் போதுதான் அதன் வலி தெரியும். (என்னத்தங்க சொல்றது வாழ்வா சாவா போராட்டம்தான்). நான் சொல்வது ஒரு சில வேளைகளில் மட்டுமே செல்லும் கிராமத்து பேருந்துகளுக்கு முழுவதும் பொருந்தும். (நம்ப ஊர் சாலைகள் போல கிராமத்து பேருந்துகளும் ரொம்ப மோசம்ங்க...!!)மற்றபேருந்துகளுக்கு சில சமயங்களில்  பொருந்தும். (அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி) அப்பொழுது கூட்டமில்லாத குளிர்சாதன பேருந்துகைளை பார்க்கும் போது ரொம்ப நொந்துக் கொள்ள வைக்கும். பி்ன்ன என்னங்க.. 80 பேர் இருக்கையில 10 பேர் போனால் எப்படியிருக்கும்..???!!
அப்ப ஏழைக்கு ஒரு நீதி..??? பணக்காரருக்கு ஒரு நீதியா ??? இது மிகவும் அநீதி. நகர பேருந்துகள் எனப்படும் பேருந்து நடனமாடும் பேருந்தாக மாறிவருவது மறுக்க முடியாத உண்மை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத மிகவும் இடர் நிறைந்த பயணம். பெரும்பாலும் யாரும் விரும்பி படியில் நிற்பதில்லை சூழ்நிலை நிற்கவைக்கிறது.
கர(ண)ம் தப்பினால் மரணம்.

இப்ப படிக்கட்டுகளில் ”படியில் பயணம் நொடியில் மரணம்” என்பது மாறி ”படியில் நின்று ”செல்”போன் பேசாதீர்..!! இவற்றைதான் காணமுடிறது. மாற்றம் இருக்கலாம் அதுக்காக இப்படியா..!!!???

அவற்றை முதலில் மாற்ற வேண்டும். ”படியில் நிற்காதீர்கள்”..!! இப்படியிருந்தால் ஓரளவுக்கு மாற்றம் வரும். அதுசரி நாம் எப்பொழுது விதிமுறைகளையும் அறிவுரைகளையும் கடைபிடிக்கிறோம்..!!??? என்ன சொல்லுறீங்க...!!??? அப்படி செய்திருந்தால் அல்லது செய்தால் ஏன் இந்த அவல நிலை..??!! (குறைகள் என்று எழுத ஆரம்பித்தால் பெரிய தொடராகவே எழுதலாம்..!)

மேற்குறிப்பிட்ட இடர் நிறைந்த சூழலிலும் நம்ப மக்கள் பேருந்துக்குள் அலைபேசியை வைத்து செய்யும் அட்டகாசங்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஓட்டுனருக்கு மற்றும் நடத்துனருக்கு கொடுக்கும் தொந்தரவுகள் குறித்தும் காண்போம்.
(நன்றி. கூகுள் படங்கள்)


சீனா, கொரியா நாட்டு தயாரிப்பு அலைபேசியை வாங்கிகொண்டு அழைப்பு ஒலி அளவை உச்சத்தில் வைத்திருப்பது. ஒலிமாசுபாட்டை ஏற்படுத்துவது இவ்வகையிலான அலைபேசிகளே..!! (இதுபோன்ற பல இடங்களில் ஏற்படுத்தப்படுகிறது)

திருவிழாவில் பாடும் ஒலிப்பெருக்கி போன்று எவ்வளவு அதிகபட்ச சத்தமோ... அவற்றை வைத்து வெளியில் அனைவருக்கும் கேட்கும்படி பாட்டு கேட்பது. (சிலருக்கு பிடிக்கும் பலருக்கு பிடிக்காது)

பக்கத்திலிருக்கும் நண்பனுக்கோ, தெரிந்தவருக்கோ, தவறிய அழைப்பு செய்து அவரை மட்டுமின்றி பொதுமக்களையும் நடத்துனரையும் கடுப்பேத்தி (ம) வெறுப்பேற்றும் வகையில் தொந்தரவு செய்வது.

தன்னுடைய மகிழ்ச்சிக்காக, ஒலிபெருக்கியை வைத்து முன்னால் இருக்கையில் இருப்பவர் அலைபேசியை பயன்படுத்துவதால்  ஓட்டுநனருக்கு கவனசிதறலையும், பின்னால் இருக்கையில் இருப்பவர் நடத்துனருக்கு காரியச்சிதறலையும் (பயணச்சீட்டு வாங்குவதில்லை)

அலைபேசியால்  பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பெரிய தலைவலியே ஏற்படும் வகையில் அட்டகாசம் செய்து தொந்தரவு ஏற்படுத்துவது.  இப்படி அலைபேசியை நடத்துனர் ஊதும் ஊதுகுழல் ஒலி ஓட்டுநனருக்கு கூட கேட்காத நிலையும் இதனால் ஏற்படுத்துவது. இவற்றையெல்லாம் முடிந்த வரை நாம் தவிர்ப்போம். முடிந்தவரை நம்மை சார்ந்தவர்களையும் தவிர்க்க வைப்போம் என்பதே இத்தொடர்பதிவுகளின் முக்கிய கருத்து. தங்கள் கருத்தையும் அவசியம் கூறுங்கள்.
You can leave a response, or trackback from your own site.

77 Responses for this post

  1. ஹ்ம்ம் சரி தான் .. கவனமாக இருக்கணும்

  2. மிகவும் அசத்தலானப் பதிவு நண்பரே . நமது தினசரி வாழ்வில் இந்த மொபைல் போன்களினால் ஏற்படும் தொந்தரவுகள் அனைத்தையும் . மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் . இந்த பதிவில் சொல்லப் பட்டிருக்கும் ஒவ்வொரு தகவலும் அப்பட்டமான உண்மைகளே . இந்த பதிவை வாசித்து அனைவரும் மாறாவிட்டாலும் ஒருசிலர் மாறினாலும் இந்த பதிவிற்கு வெற்றியே !. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

  3. நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
    http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
    சசிகுமார் (வந்தேமாதரம்)

  4. //அப்ப ஏழைக்கு ஒரு நீதி..??? பணக்காரருக்கு ஒரு நீதியா ??? இது மிகவும் அநீதி./

    எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் எதுகை மோனைல பேச முடியுது ..!!
    ஹி ஹி ஹி .. நல்லா இருக்கு ..

  5. ///சீனா, கொரியா நாட்டு தயாரிப்பு அலைபேசியை வாங்கிகொண்டு அழைப்பு ஒலி அளவை உச்சத்தில் வைத்திருப்பது. ஒலிமாசுபாட்டை ஏற்படுத்துவது இவ்வகையிலான அலைபேசிகளே//

    அத ஏன் கேக்குறீங்க , அது ரேடியோ கட்டுன மாதிரி பாடுது ..

  6. //இருக்கையில் இருப்பவர் நடத்துனருக்கு காரியச்சிதறலையும் (பயணச்சீட்டு வாங்குவதில்லை) /

    இதுதான் நிறைய பேரு செய்யுறாங்க .. டிக்கெட் வானகம பெரிய பிரச்சினை .. பதிவு நல்லா இருக்கு அண்ணா ..!!

  7. நடப்பை, அழகாய் சொல்லியுள்ளீர்கள்! நன்றி நண்பா.

  8. பயணம் நல்லா இருக்கு!

  9. //தமிழ் said...
    ஹ்ம்ம் சரி தான் .. கவனமாக இருக்கணும் //

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி தமிழ்.

  10. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    மிகவும் அசத்தலானப் பதிவு நண்பரே . நமது தினசரி வாழ்வில் இந்த மொபைல் போன்களினால் ஏற்படும் தொந்தரவுகள் அனைத்தையும் . மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் . இந்த பதிவில் சொல்லப் பட்டிருக்கும் ஒவ்வொரு தகவலும் அப்பட்டமான உண்மைகளே . இந்த பதிவை வாசித்து அனைவரும் மாறாவிட்டாலும் ஒருசிலர் மாறினாலும் இந்த பதிவிற்கு வெற்றியே !. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .//

    தங்களின் வெளிப்படையான மற்றும் விரிவான கருத்துப்பகிர்வுககு நன்றி பனித்துளி நண்பா.

  11. //சசிகுமார் said...
    நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
    http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
    சசிகுமார் (வந்தேமாதரம்)//

    தங்கள் சேவை தொடரட்டும் எப்பொழுதும். பதிவை படித்தேன் தகவலுக்கு நன்றி சசி.

  12. //ப.செல்வக்குமார் said...
    //அப்ப ஏழைக்கு ஒரு நீதி..??? பணக்காரருக்கு ஒரு நீதியா ??? இது மிகவும் அநீதி./

    எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் எதுகை மோனைல பேச முடியுது ..!!
    ஹி ஹி ஹி .. நல்லா இருக்கு ..//

    ஹ...ஹா.. மகிழ்ச்சி. அதுவா தோனுது செல்வா.

  13. ப.செல்வக்குமார் said...
    ///சீனா, கொரியா நாட்டு தயாரிப்பு அலைபேசியை வாங்கிகொண்டு அழைப்பு ஒலி அளவை உச்சத்தில் வைத்திருப்பது. ஒலிமாசுபாட்டை ஏற்படுத்துவது இவ்வகையிலான அலைபேசிகளே//

    அத ஏன் கேக்குறீங்க , அது ரேடியோ கட்டுன மாதிரி பாடுது ..//

    ஹ...ஹா.. சரியா செல்லிட்டீங்க. நானும் வானொலி போன்று ஒலிக்கிறது என்றுதான் முதலில் தட்டச்சு செய்தேன். பிறகுதான் திருவிழாவில் பாடுவதுபோல் என்று மாற்றினேன்.

  14. //ப.செல்வக்குமார் said...
    //இருக்கையில் இருப்பவர் நடத்துனருக்கு காரியச்சிதறலையும் (பயணச்சீட்டு வாங்குவதில்லை) /

    இதுதான் நிறைய பேரு செய்யுறாங்க .. டிக்கெட் வானகம பெரிய பிரச்சினை .. பதிவு நல்லா இருக்கு அண்ணா ..!!//

    அனைத்தும் நேரில் பார்த்து அனுபவித்தவைகள் செல்வா. கருத்துக்கு நன்றி.

  15. //சைவகொத்துப்பரோட்டா said...
    நடப்பை, அழகாய் சொல்லியுள்ளீர்கள்! நன்றி நண்பா.//

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி நண்பரே..!

  16. //எஸ்.கே said...
    பயணம் நல்லா இருக்கு!//

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி எஸ்.கே.

  17. ம்ம், இந்த தொல்லை பேசிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.

  18. ஹலோ துபாயா...

    இல்லைடா இது எம லோகம்.

    இப்படிக்கு யாரும் ஓட்டு போடலைன்னாலும் தளம் நடத்துவோர் சங்கம்.

  19. இந்த cell phoneகளால் பொய் பெருகிப்போயிருக்கு கவனிச்சீங்களா?

    தொல்லைப்பேசிகள்:-(((

  20. ஆம் சரியாகச் சொன்னீர்கள்......கவனம் தேவைதான்.

  21. உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.

  22. இந்த பதிவை வாசித்து அனைவரும் மாறாவிட்டாலும் ஒருசிலர் மாறினாலும் இந்த பதிவிற்கு வெற்றியே !. வாழ்த்துக்கள்

  23. //nis said...
    ம்ம், இந்த தொல்லை பேசிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. //

    ஆமாம். உண்மைதான் நண்பரே..!
    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி nis.

  24. //விக்கி உலகம் said...
    ஹலோ துபாயா...

    இல்லைடா இது எம லோகம்.

    இப்படிக்கு யாரும் ஓட்டு போடலைன்னாலும் தளம் நடத்துவோர் சங்கம். //

    ஹ...ஹா..ஹா வடிவேலு காமெடி பார்த்துட்டு நேரா நம்ப வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி விக்கி.

  25. //துளசி கோபால் said...
    இந்த cell phoneகளால் பொய் பெருகிப்போயிருக்கு கவனிச்சீங்களா?

    தொல்லைப்பேசிகள்:-((( //

    நிச்சயம் தாங்கள் சொல்வது போல் பொய்பேசிகளாகவும், தொல்லைபேசிகளாகவும் தான் உள்ளது. துளசி மேடம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி.

  26. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    ஆம் சரியாகச் சொன்னீர்கள்......கவனம் தேவைதான். //

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து நண்பரே.

  27. //சசிகுமார் said...
    உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம். //

    தங்களது சேவை தொடர மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் நண்பரே..! வருகை மற்றும் கருத்துக்கு நன்றி சசி.

  28. //ISAKKIMUTHU said...
    இந்த பதிவை வாசித்து அனைவரும் மாறாவிட்டாலும் ஒருசிலர் மாறினாலும் இந்த பதிவிற்கு வெற்றியே !. வாழ்த்துக்கள் //

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி ISAKKIMUTHU நண்பரே..!

  29. ஆம் சரியாகச் சொன்னீர்கள்......கவனம் தேவைதான்.

  30. //வெறும்பய said...
    ஆம் சரியாகச் சொன்னீர்கள்......கவனம் தேவைதான்.//

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுககும் நன்றி நண்பர் வெறும்பய.

  31. ஆமாங்க.. இந்த சைனா போனை வைச்சிக்கிட்டு பஸ்ல நிறைய பேர் தொந்தரவு தருவாங்க.. அவங்களுக்கெல்லாம் அப்படி பண்றது ரொம்பப் பெருமையா இருக்கு போல..

    படியில தொங்கிட்டுப் போறதைக் கண்டிப்பாகத் தவிர்க்கனுங்க.. ஆனால் கரெக்டான நேரத்துக்கு போக வேண்டிய இடத்துக்கு போகனுமேன்னுதான் இந்த மாதிரி தொங்கிட்டுப் போற நிலை எல்லாம் ஏற்படுது.. நீங்க சொன்ன மாதிரி கரம் தப்பிடுச்சுன்னா.. ஆபத்துதான்..

    ஒருமுறை படிக்கட்டுல என் கை ஸ்லிப் ஆகறப்போ ஒருத்தர் கரெக்டா புடிச்சுட்டார்.. அதுல இருந்து அந்த வேலைய விட்டாச்சு.. எவ்வளவு லேட்டானாலும் சரி.. படிக்கட்டு பயணம் செய்யறதே இல்ல.. இப்ப நினைச்சாலும் பகிர்னு இருக்கு..

  32. //பதிவுலகில் பாபு said...
    ஆமாங்க.. இந்த சைனா போனை வைச்சிக்கிட்டு பஸ்ல நிறைய பேர் தொந்தரவு தருவாங்க.. அவங்களுக்கெல்லாம் அப்படி பண்றது ரொம்பப் பெருமையா இருக்கு போல..

    படியில தொங்கிட்டுப் போறதைக் கண்டிப்பாகத் தவிர்க்கனுங்க.. ஆனால் கரெக்டான நேரத்துக்கு போக வேண்டிய இடத்துக்கு போகனுமேன்னுதான் இந்த மாதிரி தொங்கிட்டுப் போற நிலை எல்லாம் ஏற்படுது.. நீங்க சொன்ன மாதிரி கரம் தப்பிடுச்சுன்னா.. ஆபத்துதான்..

    ஒருமுறை படிக்கட்டுல என் கை ஸ்லிப் ஆகறப்போ ஒருத்தர் கரெக்டா புடிச்சுட்டார்.. அதுல இருந்து அந்த வேலைய விட்டாச்சு.. எவ்வளவு லேட்டானாலும் சரி.. படிக்கட்டு பயணம் செய்யறதே இல்ல.. இப்ப நினைச்சாலும் பகிர்னு இருக்கு..//

    தங்களின் வருகைக்கும் அனுபவம் நிறைந்த தெளிவான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி பாபு.

  33. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


    www.ellameytamil.com

  34. தங்களது தகவலுக்கு மிக்க நன்றி மணிபாரதி.

  35. இந்தக் கைபேசிகளுடன், கூட்டங்களுக்கும்,கச்சேரிகளுக்கும் வந்து,சுற்றி இருப்பவர்கள் நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் செய்யும் மனிதர்கள்.தன் பாதுகாப்பு பற்றியே நினைக்காத(பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பது) இவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறார்களா என்ன.இவர்களையெல்லாம் திருத்த முடியாது.

  36. //சென்னை பித்தன் said...
    இந்தக் கைபேசிகளுடன், கூட்டங்களுக்கும்,கச்சேரிகளுக்கும் வந்து,சுற்றி இருப்பவர்கள் நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் செய்யும் மனிதர்கள்.தன் பாதுகாப்பு பற்றியே நினைக்காத(பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பது) இவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறார்களா என்ன.இவர்களையெல்லாம் திருத்த முடியாது.//

    ஆமாம் நண்பரே..! தாங்கள் சரியா சொல்லியிருக்கீங்க..!! அனைத்தும் உண்மையே தினமும் நாம் கண்கூடாக காணகூடியவைகள்தான். என்னத்த சொல்லி அவர்களை திருத்த..???? முடிந்தவரை நாம், நம்மைச்சேர்ந்தவர்களை மாற்ற முயற்சிப்போம். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

  37. மிகத்தெளிவாக சிந்திக்கக்கூடிய செய்திகளை விழிப்புணர்ச்சியுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

  38. //மாணவன் said...
    மிகத்தெளிவாக சிந்திக்கக்கூடிய செய்திகளை விழிப்புணர்ச்சியுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்//

    தங்களின் முதல் வருகைக்கும், வெளிப்படையான மற்றும் ஊக்கமிக்க கருத்துப்பகிர்வுக்கு நன்றி மாணவன் நண்பரே.

  39. பாவாணரின் வரிகளை முகப்பில் பார்த்ததுமே புரிந்து போனது. நம்ம ஆளு என்று. அலைபேசியும் பயணமும் நல்ல பதிவு. உங்கள் பழமொழிகளைக் கொண்டே நிறைய ஹைகூக்கள் எழுதலாம்

  40. Late aha vandhadhukku sorringa romba velai blog pakkame vara mudiyalai.
    Amanga busla ivanga panra sound polution thanga mudiyala. Boom tv illannu sandhosama irupom. Appadhan oruthan chaina speakera yeduthu kattuvan. Kodumai. Nalla vilipunarvu padhivu.

  41. //சிவகுமாரன் said...
    பாவாணரின் வரிகளை முகப்பில் பார்த்ததுமே புரிந்து போனது. நம்ம ஆளு என்று. அலைபேசியும் பயணமும் நல்ல பதிவு. உங்கள் பழமொழிகளைக் கொண்டே நிறைய ஹைகூக்கள் எழுதலாம்.//

    தங்களின் முதல் வருகைக்கும், ஊக்கமிக்க கருத்துப்பகிர்வுக்கும்
    நன்றி சிவகுமாரன் நண்பரே.!

  42. //பிரியமுடன் ரமேஷ் said...
    Late aha vandhadhukku sorringa romba velai blog pakkame vara mudiyalai.
    Amanga busla ivanga panra sound polution thanga mudiyala. Boom tv illannu sandhosama irupom. Appadhan oruthan chaina speakera yeduthu kattuvan. Kodumai. Nalla vilipunarvu padhivu.//

    தாமதமாக வந்தாலும் பரவாயில்லை நண்பரே..! முதலில் வேலை பிறகுதான் வலைப்பக்கங்கள். வேலைமிக்க சூழலிலும் பதிவினை படித்து உற்சாகப்படுத்தும் வகையில் தங்களது கருத்தினை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பிரியமுடன் ரமேஷ் நண்பரே..!

  43. ////
    இப்ப படிக்கட்டுகளில் ”படியில் பயணம் நொடியில் மரணம்” என்பது மாறி ”படியில் நின்று ”செல்”போன் பேசாதீர்..!! இவற்றைதான் காணமுடிறது. மாற்றம் இருக்கலாம் அதுக்காக இப்படியா..!!!???
    //////

    தானியங்கி கதவுகள் இதற்க்கு நல்ல தீர்வாக இருக்கும்

  44. //THOPPITHOPPI said...
    ////இப்ப படிக்கட்டுகளில் ”படியில் பயணம் நொடியில் மரணம்” என்பது மாறி ”படியில் நின்று ”செல்”போன் பேசாதீர்..!! இவற்றைதான் காணமுடிறது. மாற்றம் இருக்கலாம் அதுக்காக இப்படியா..!!!???
    //////

    தானியங்கி கதவுகள் இதற்க்கு நல்ல தீர்வாக இருக்கும்.//

    தங்களது கருத்தும் சரியானதுதான் ஆனால் இது நெடுந்தூரம் பயணம் போகும்போது மட்டுமும் பெரும்பாலான விரைவுபேருந்துகளிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே நாம் கேட்பது கிராமங்களுக்குள் செல்லும் ஓட்டை உடைசல் பேருந்துக்கும் நகர பேருந்துகளுக்கும் இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் மிக நன்றாக இருக்கும். தங்களது கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே.,!

  45. தேவையான பகிர்வு.மொபைல் மொக்கையர்கள் தலைவலி தாங்க முடியலை தான் இப்பெல்லாம்.

  46. //asiya omar said...
    தேவையான பகிர்வு.மொபைல் மொக்கையர்கள் தலைவலி தாங்க முடியலை தான் இப்பெல்லாம். //

    ஆமாம் உண்மைதான் மேடம். தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..!

  47. //முனைவர்.இரா.குணசீலன் said...
    தேவையான பதிவு. //

    வாங்க முனைவரே..! தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..!

  48. தெளிவாக சிந்திக்கக்கூடிய செய்தி.அருமையான பதிவு...

  49. //பிரஷா said...

    தெளிவாக சிந்திக்கக்கூடிய செய்தி.அருமையான பதிவு...//

    வாங்க பிரஷா..!
    எனக்கும் 50 கருத்துகள் வருவதற்கு தங்களைப் போன்றவர்களின் ஊக்கமிக்க கருத்துகள் மட்டுமே காரணம். தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..!

  50. அழகான எழுத்துநடை..நல்ல சிந்தனை..வாழ்த்துக்கள்..

  51. Anonymous

    என் பதிவுலகான madrasbhavan.blogspot.com ஐ பின்தொடர்வதற்கு நன்றி பிரவீன். தாங்கள் எதிர்பார்க்கும் நற்பதிவுகளை தர கண்டிப்பாக முயல்வேன். உங்களை தொடரும் 90 ஆவது நண்பனாக நான் இணைவதில் மகிழ்ச்சி. என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com

  52. //ஹரிஸ் said...
    அழகான எழுத்துநடை..நல்ல சிந்தனை..வாழ்த்துக்கள்.//

    வாங்க நண்பரே ஹரிஸ்..!
    தங்களது கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி..!

  53. //சிவகுமார் said...
    என் பதிவுலகான madrasbhavan.blogspot.com ஐ பின்தொடர்வதற்கு நன்றி பிரவீன். தாங்கள் எதிர்பார்க்கும் நற்பதிவுகளை தர கண்டிப்பாக முயல்வேன். உங்களை தொடரும் 90 ஆவது நண்பனாக நான் இணைவதில் மகிழ்ச்சி. என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com //

    தஙகளது மற்ற தளங்களையும் நிச்சயம் பின்தொடர்கிறேன் சிவகுமார் நண்பரே..! நீங்கள் எம்மை பின்தொடர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே..!
    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.

  54. //polurdhayanithi said...

    parattugal
    polurdhayanithi //

    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி போளுர்தயாநிதி நண்பரே.!

  55. அருமையான சுட்டல் படத்துடன் அரமையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    http://mathisutha.blogspot.com/

  56. நல்ல பதிவு. பஸ்ல போகும் போது யோசிச்சதா...

  57. //ம.தி.சுதா said...

    அருமையான சுட்டல் படத்துடன் அரமையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    http://mathisutha.blogspot.com/
    //

    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ம.தி.சுதா நண்பரே.!

  58. //பாரத்... பாரதி... said...

    நல்ல பதிவு. பஸ்ல போகும் போது யோசிச்சதா...//

    ஆமாம்..! சரியா.. சொல்லீட்டீங்க.,!!
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரத்... பாரதி...நண்பரே.!

  59. ரொம்ப நல்ல விடயம்...

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா..

  60. அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
    http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

  61. உங்களது இந்தப் பதிவு (புதிர்) வலைச்சரத்தில் இன்று என்னால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் வந்து பார்க்கவும்.

  62. அடுத்த பதிவு எப்போங்க?

  63. //அரசன் said...
    ரொம்ப நல்ல விடயம்...

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா.. //

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசரே.!

  64. //ரஹீம் கஸாலி said...
    அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
    http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html //

    ம்ம் பார்த்தேன் நண்பரே..! ரொம்ப நல்லாயிருக்கு..!

  65. //Madhavan Srinivasagopalan said...
    உங்களது இந்தப் பதிவு (புதிர்) வலைச்சரத்தில் இன்று என்னால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் வந்து பார்க்கவும். //

    தங்களின் அறிமுகத்திற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே.,!

  66. //Chitra said...
    அடுத்த பதிவு எப்போங்க?//

    இப்ப பதிவு எழுவதை விட வாசிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.. ஆக விரைவில் ஒரு பதிவுடன் வருகிறேன். தங்களது ஆதரவுக்கு நன்றி சித்ரா மேடம்..!

  67. அடுத்த பதிவு எப்பங்க.. ஏன் இவ்வளவு இடைவெளி...

  68. //பாரத்... பாரதி... said...
    அடுத்த பதிவு எப்பங்க.. ஏன் இவ்வளவு இடைவெளி...//

    இப்ப பதிவு எழுவதை விட வாசிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.. ஆக விரைவில் ஒரு பதிவுடன் வருகிறேன். தங்களது ஆதரவுக்கு நன்றி பாரத்... பாரதி..!

  69. என்னாச்சு நண்பா....நீ.......ண்ட நாட்களாக பதிவிடவில்லை.

  70. நல்ல பதிவுங்க நன்றி

  71. //சீனா, கொரியா நாட்டு தயாரிப்பு அலைபேசியை வாங்கிகொண்டு அழைப்பு ஒலி அளவை உச்சத்தில் வைத்திருப்பது//

    மிகச் சரியா சொன்னீங்க..

  72. மிக அருமையான பதிவு நன்றி

  73. keep up the good work going on tamil cinema

  74. good tamil cinema content and thanks for sharing.

  75. Casino Player Complaints - DMC
    Read about the 용인 출장샵 complaints of casino Player Complaints 구미 출장안마 and complaints from a gambling site, the 광양 출장안마 casino player complaints department, 문경 출장안마 and other online gambling  영천 출장마사지 Rating: 2 · ‎1 vote

Post a Comment