இலக்குகள் ஏன் முக்கியமானவை ?

வணக்கம் நண்பர்களே..!! முந்தைய  பதிவில் ஷிவ்கேராவின் யு கேன் வின் (You Can Win) என்ற புத்தக தொகுப்பிலிருந்து படித்ததில் பிடித்ததாக நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும் என்ற பதிவில் இலக்குகளை அமைத்தலும் அடைவதும் குறித்து சாட்விக் சாதனையுடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் நம்முடைய இலக்குகள் ஏன் முக்கியமானவை ? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
நல்ல சுட்டெரிக்கும் வெய்யிலி்ல், நல்ல சக்தி வாய்ந்த ஒரு லென்ஸை ஒரு தாளின் மேல் அசைத்துக் கொண்டிருந்தால், அந்தத் தாளில் தீ பற்றவே பற்றாது. ஆனால் அதை ஒரே இடத்தில் மையப்படுத்திப் பிடித்து கொண்டிருந்தால், அந்தத் தாள் தீப்பற்றிக் கொள்ளும். இதுவே ஒருமுகப்படுத்துவதின் சக்தியாகும்.
ஒரு கால்பந்தாட்ட அணி களத்தில் முழு உற்சாகத்தில் இருக்கும் போது கோல் கம்பங்களை யாரோ பெயர்த்துச் சென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆட்டம் என்னவாகும்? அங்கேதான் ஒன்றுமே இல்லையே, நாம் எப்படி கோல் போடுவது? நாம் இலக்கை நெருங்கி விட்டோம் என்று எப்படி தெரிந்து கொள்வது? திசையே இல்லாத உற்சாகம் காட்டுத்தீ போன்றது, அது விரக்தியி்ல் கொண்டு போய் விட்டு விடும். இலக்குகளே நாம் ஒரு திசையில் போய் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைத் தரும். அடுத்த பதிவில் கனவுகளால் எப்படி இலக்கை அடைய முடியுமென பகிர்கிறேன்.
* * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

14 Responses for this post

  1. எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிர? முடியலப்பா....
    இருந்தாலும் பெரிய விஷயத்தை அழகா சுருக்கமா நச்சுன்னு சொல்லியிருக்க.. வாழ்த்துக்கள்.

  2. // அடுத்த பதிவில் கனவுகளால் எப்படி இலக்கை அடைய முடியுமென பகிர்கிறேன்.//

    உண்மைலேயே நல்லா இருக்குது அண்ணா., அந்த கால்பந்தாட்ட விஷயம் உண்மைலேயே நல்லா இருக்கு ..!

  3. நல்லா சுருக்கமா சொல்லி இருக்கீங்க , குட ஒன்

  4. அருமை நண்பரே... சுருக்கமாகவும் சூதானமாகவும்...

  5. //gunalakshmi said...
    எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிர? முடியலப்பா....
    இருந்தாலும் பெரிய விஷயத்தை அழகா சுருக்கமா நச்சுன்னு சொல்லியிருக்க.. வாழ்த்துக்கள். //

    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!!

  6. ப.செல்வக்குமார் said...
    // அடுத்த பதிவில் கனவுகளால் எப்படி இலக்கை அடைய முடியுமென பகிர்கிறேன்.//

    உண்மைலேயே நல்லா இருக்குது அண்ணா., அந்த கால்பந்தாட்ட விஷயம் உண்மைலேயே நல்லா இருக்கு ..!

    மிக்க மகிழ்ச்சி செல்வா.. ! தங்களது வருகை மற்றும் கருத்துக்கு..!!

  7. //மங்குனி அமைசர் said...
    நல்லா சுருக்கமா சொல்லி இருக்கீங்க , குட ஒன் //

    மங்குனி அமைசர் குட் சொல்லுறார்னா ரொம்ப பெருமையா இருக்கு.. ஹி..ஹி.. நன்றி அமைச்சரே..!!

  8. //வெறும்பய said...
    அருமை நண்பரே... சுருக்கமாகவும் சூதானமாகவும்...//

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நண்பரே!!

  9. ரொம்ப நல்லாயிருக்குங்க!

  10. //எஸ்.கே said...
    ரொம்ப நல்லாயிருக்குங்க! //

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

  11. ஷிவ் கெரேயின் புத்தகத்திலிருந்து அருமையான ஜூஸ்!

  12. //தேவன் மாயம் said...
    ஷிவ் கெரேயின் புத்தகத்திலிருந்து அருமையான ஜூஸ்!//

    தங்களது கருத்துக்கு நன்றி தேவா சார்..!!

  13. //பட்டாபட்டி.. said...
    நல்ல கருத்து...//

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நண்பரே!!

Post a Comment